ஆலங்குளத்தில் வைரஸ் காய்ச்சல்-200 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம் மற்றும் சுற்றுபுறக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக புளூ காய்ச்சல் எனப்படும் மழைக்காலங்களில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
முதல்கட்டமாக உணவை கூட முழுங்க முடியாத தொண்டை வலியும், உடல் அசதியும் ஏற்படும். பின்னர் காய்ச்சல் வரும். ஆலங்குளம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனையில் புளூ காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.












Click it and Unblock the Notifications