மாணவியுடன் உல்லாசம்: படம் எடுத்து பரப்பியவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவியை மயக்கி அவருடன் உல்லாசமாக இருந்து, அதை ரகசியமாக படம் எடுத்து வைத்து, பின்னர் செல்போன் மூலம் பலருக்கும் அனுப்பிய குரூர புத்தி கொண்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை நகரில் செல்போன் மூலம் ஒரு ஆபாசப் படம் எம்எம்எஸ் மூலம் பரவி வந்தது. அந்தப் படத்தில் பள்ளிச் சீருடையன் ஒரு மாணவியும், வாலிபர் ஒருவரும் உல்லாசமாக இருந்தனர்.

இந்த ஆபாசக் காட்சி ஐந்து நிமிடம் ஓடும் வகையில் இருந்தது. இருவரது முகங்களும் தெளிவாகவும் தெரிந்தன.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது.

வீடியோ படத்தை பார்த்த போலீஸார், அதில் இருந்த ஆணின் முகத்தை வைத்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில், அண்ணா நகர், குச்சி நாயக்கன் தெருவைச் சேர்ந்த பார்த்திபன்தான் அவர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த நபரைப் பிடித்து கைது செய்தனர். அவரது தந்தை தர்மஜெயம் முட்டை வியாபாரி ஆவார். பி.எஸ்.சி முடித்துள்ள பார்த்திபன், கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்து வருகிறார்.

போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் பார்த்திபன்.

இதுகுறித்து போலீஸாரிடம் அவர் கூறுகையில், எங்கள் வீட்டருகே வசித்த பிளஸ்-2 மாணவியும், நானும் காதலித்தோம். அவரது வீட்டில் யாரும் இல்லாத போது இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டோம், அப்போது அந்த காட்சியை எனது செல்போனில் பதிவு செய்தேன். பின்னர் அதை சி.டியில் பதிவு செய்தேன்.

நண்பர்களுக்கு அந்த காட்சியை செல்போன் மூலம் பரவவிட்டேடன் என்று கூறியுள்ளார் பார்த்திபன்.

இதையடுத்து பார்த்திபன் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இதில் அந்த மாணவியுடன் பார்த்திபன் நெருக்கமாக இருக்கும் ஆபாசப் படங்கள் சிக்கின.

அந்த 2 சிடிக்களையும் பறிமுதல் செய்த போலீஸார் கோர்ட்டில் பார்த்திபனை ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+