ஐஸ் விலை ராமேஸ்வரம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ்
ராமநாதபுரம்: ஐஸ்கட்டி விலை உயர்வை குறைக்க கோரி ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தொடர் மின்வெட்டு காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனால் நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் அதன் உரிமையாளர்கள் ஐஸ் கட்டியின் விலையை பல மடங்கு உயர்த்தி விட்டனர்.
இதனால் மீனவர்கள் ஐஸ் கட்டியை அதிக விலை கொடுத்து வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால், ஐஸ் கட்டி விலையை குறைக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தது.
இந்த நிலையில் மீனவர்கள் அமைப்புகள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவதாக அறிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் போன்ற பல பகுதியில், 2000 - க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஐஸ் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ் விலை உயர்வை குறைத்தது.
இதனையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications