ஈராக் விமான விபத்தில் இந்தியர் உள்பட 7 பேர் பலி
துபாய்: ஈராக்கில் நடந்த விமான விபத்தில் இந்தியர் உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள்.
பலியானவரின் பெயர் ஜெயச்சந்திரன் அப்புக்குட்டன் (44). கேரளாவைச் சேர்ந்தவர். துபாயைச் சேர்ந்த பால்கன் ஏவியேஷன் குருபூ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சரக்குகளை ஏற்றி இறக்குவதைக் கண்காணிக்கும் மாஸ்டர் வேலையில் இவர் இருந்து வந்தார்.
இந்த நிறுவனத்தின் சரக்கு விமானத்தில் அப்புக்குட்டனும் மற்றவர்களும் சென்று கொண்டிருந்தபோது ஈராக்கில் ஏற்பட்ட விபத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் பலியானார்கள்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அப்புக்குட்டன் தவிர மற்ற 6 பேரும் பிரிட்டிஷ் கல்ப் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வியாழக்கிழமை காலை பலூஜா அருகில் உள்ள அல் ஆசாத் விமான தளத்திலிருந்து விபத்துக்குள்ளான சரக்கு விமானம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்குக் கிளம்பியது. சிறிது நேரத்தில் அதன் ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் இது விபத்துக்குள்ளானது.












Click it and Unblock the Notifications