கிங் பிஷ்ஷர்: 25% பங்குகளை விற்க மல்லையா முடிவு

Subscribe to Oneindia Tamil

Vijay Mallaya
மும்பை: கிங் பிஷ்ஷர் விமான நிறுவத்தின் 25 சதவீத பங்குகளை விற்றுவிட அதன் உரிமையாளர் விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.

சர்வதேச பொருளாதார சரிவு விமான நிறுவனங்களை பதம் பார்த்து வருகிறது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பல விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் சுருண்டு கிடக்கும் நிலையில் பொருளாதாரத் தேக்கம் அதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இப்போது விமான எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக் கொண்டிருந்தாலும் விழுந்த அடி, அடைந்த நஷ்டத்தை உடனடியாக ஈடுகட்ட இயலாத நிலை.

இப்போதைய நிலையில் விமான நிறுவனங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு லாபமே காண முடியாத சூழலில் உள்ளன.

இந் நிலையில் டெக்கன் ஏர்லைன்ஸை வாங்கி நஷ்டததை மேலும் அதிகரித்துக் கொண்ட கிங் பிஷ்ஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா தனது நிறுவனத்தின் 25 பங்குகளை விற்பது குறித்து யோசித்து வருகிறார்.

இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ், பிரிட்டனின் முன்னணி தனியார் விமான நிறுவனமான, ரிச்சர்ட் பிராஸ்னனின் விர்ஜின் அட்லாண்டிக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

இந்திய விமான நிறுவனங்களில் 26 சதவீதம் வரை வெளிநாட்டு விமான நிறுவனங்களின் முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. இந் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளார் மல்லையா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+