15 நெல்லை வக்கீல்கள் மாஜிஸ்திரேட்டுகளாக தேர்வு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையை சேர்ந்த 15 வழக்கறிஞர்கள் தேர்தில் வெற்றி பெற்று மாஜிஸ்திரேட்டுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நடந்த மாஜிஸ்திரேட்டுகளுக்கான தேர்வில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் நெல்லையை சேர்ந்த 15 வழக்கறிஞர்கள் மாஜிஸ்திரேட்டுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர் விபரம்:
எஸ்.மகேஸ்வரி பானுரேகா, இருதயராணி, அசன் முகமது, முருகன், சாமுவேல் பெஞ்சமின், ஜெயக்குமாரி ஜெமி, பிரீதா முரளி, கே.நம்பிராஜன், எம்.நம்பிராஜன், ஜெயசுதாகர், உதயவேலவன், ஜேசுராஜா, ஆஷா, மாரியப்பன், சுதாகர்.
இவர்களுக்கு நெல்லை வக்கீல் சங்கம் சார்பில் நாளை பாராட்டு விழா நடக்கிறது.












Click it and Unblock the Notifications