பகுஜன் சமாஜில் சேருமாறு என்னை அழைத்தனர்: எஸ்.வி.சேகர்
கும்பகோணம்: பகுஜன் சமாஜ் கட்சியில் சேருங்கள். அதன் தென்னிந்திய பிராமணர் ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவராக்குவதாக என்னை அழைத்தனர். ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டேன் என அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் பிராமணர்களுக்கு 58 சீட் ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியில் சேர்ந்தால் தென்னிந்திய பிராமணர் ஒருங்கிணைப்பு தலைவராக ஆக்குவதாக என்னிடம் கேட்டார்கள். ஆனால் எனக்கு அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியிலும் சேர விருப்பம் இல்லை.
ஆனால், எனக்கு தெரியாமலே என்னைப் பற்றி நிறைய விஷயங்கள் வெளி வருகிறது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்ட விதம் காட்டுமிராண்டித்தனமானது. இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கல்லூரி மாணவர்களையும் நீக்க வேண்டும். இதை வேடிக்கை பார்த்த போலீசாருக்கு ஈரல் மட்டுமல்ல, இதயம், கிட்னி போன்றவைகளும் கூட கெட்டுவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications