தீவிரவாதிகள் தாக்குதல்: மும்பை பங்குச் சந்தை மூடல்!
Subscribe to Oneindia Tamil

மும்பையில் நேற்று இரவும் இன்று காலையும் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் இறங்கினர். இதில் 100க்கும் மேற்பட்டேர் கொல்லப்பட்டனர். 1000 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். வெளிநாட்டுப் பயணிகளும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பை பங்குச் சந்தைக் கட்டடத்தையும் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகத் தெரியவந்தது.
இதனால் இன்றைக்கு வர்த்தகம் நடைபெறாது என அறவித்துள்ள மும்பை பங்குச் சந்தை நிர்வாகம், மும்பை பங்கு வர்த்தக கட்டிடத்தை மூடியது.
அதேபோல பொருட்களுக்கான ஆன்லைன் வர்த்தகமும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு பத்திரங்கள் மற்றும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனையும் இன்று முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications