3 வீடுகளில் 135 பவுன் நகைகள் கொள்ளை
ஈரோடு: ஈரோடு அருகே பட்டபகலில் 3 வீட்டின் பூட்டுகளை உடைத்து 135 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே காளிங்கராயன் பாளையம் முதலி தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மனைவி கலைவாணி.
இவர்கள் வீட்டை பூட்டி விட்டு உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்ற நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ 50 ஆயிரம் ரொக்கம் ஆயவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதே போன்று அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் விஸ்வநாதன். இவரது மனைவி விஜயா. இவர்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற தருணத்தில் அந்த வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ரொக்கப்பணம் ரூ 30 ஆயிரம் ஆகியவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதே போன்று காளிங்கராயன் பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பவர் வீட்டில் 10 பவுன் நகைகள், ரொக்கப் பணம் ரூ 5,000 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பட்டபகலில் மூன்று வீடுகளில் கொள்ளை நடந்துள்ளதால் அருகில் வசிக்கும் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications