ரூ.1000 கோடி கடன் திரட்டும் ஏர் இந்தியா
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தனது உடனடி செலவுகளுக்காக ரூ. 1,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான விமான நிறுவனங்களைப் போலவே பெரும் நிதி சிக்கலில் மாட்டியுள்ள பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு விமானங்கள் வாங்கவும் விரிவாக்கப் பணிகளுக்கும் ரூ.13,550 கோடி தேவைப்படுகிறது.
இதை பங்குச் சந்தையில் திரட்ட ஏர் இந்தியா திட்டமிட்டது. ஆனால், இப்போது உள்ள இக்கட்டான பொருளாதார சூழலில் பங்குகளை வெளியிடும் திட்டத்தை அந்த நிறுவனம் ஒத்திப் போட்டுவிட்டது.
இந் நிலையில் அந்த நிறுவனத்திற்கு அன்றாட செலவினங்களை எதிர்கொள்ளவே உடனடியாக ரூ.1,000 கோடி நிதி தேவைப்படுகிறது.
இதை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய அரசிடம் இந்த நிறுவனம் கோரிய ரூ. 4,000 இன்னும் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர 21 புதிய விமானங்கள் வாங்க ரூ. 17,500 கோடியையும் கடனாகவே திரட்டவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications