நிலையாக ஆரம்பித்து நிலைகுலைந்த சென்செக்ஸ்

Subscribe to Oneindia Tamil

BSE
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று ஆரம்பம் நம்பிக்கை தரும் விதத்தில் அமைந்தாலும், வர்த்தக நேர முடிவில் மீண்டும் சறுக்கியது. 70 புள்ளிகள் கூடுதலுடன் துவங்கிய சென்செக்ஸ் பிற்பகல் நிலவரப்படி 130 புள்ளிகள் உயர்ந்து 9223 ஆக இருந்தது.

ஆனால் வர்த்தக நேர முடிவில் 252 புள்ளிகளை இழன்து மீண்டும் 9 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழே போனது குறியீட்டெண்.

தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீட்டெண்ணில் ஆரம்பத்திலிருந்தே மெதுவான போக்கு காணப்பட்டது. ஒருகட்டத்தில் நிப்டியில் 46 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் மாலையில் நிலைமை தலைகீழாகிவிட்டது. 72 புள்ளிகளை இழந்த நிப்டி 2682-புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா ஆகியவற்றின் பங்குகள் 3 சதவிகிதம் வரை கூடுதல் விலைக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன. வங்கித் துறைப் பங்குகள் பெரும்பாலும் கூடுதல் விலைக்கு விற்பனையாகின. ஆனால் பெல், சுசுகி, ஐடிசி பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மும்பை நகரம் தீவிரவாதத் தாக்குதல்களிலிருந்து சகஜநிலைக்குத் திரும்பி இருப்பதாலும், நிதியமைச்சர் பொறுப்பை இப்போது பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனிக்க முடிவு செய்திருப்பதாலும், நாட்டின் பங்கு வர்த்தகம் இன்று நிலையான போக்கில் உள்ளதாக பங்கு வர்த்தக நிபுணர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். ஆனால் இப்போது, சர்வதேச நிதி நெருக்கடி காரணமாகவே இந்த வீழ்ச்சி எனக் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+