தீவிரவாதி கஸாவிடம் எப்பிஐ-இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணை

இதுவரை அவனிடம் இந்திய உளவுப் பிரிவான ஐ.பி, வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா, மும்பை தீவிரவாதத் தடுப்பு போலீசார், ராணுவ உளவுப் பிரிவினர் ஆகியோர் மட்டுமே விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஏகப்பட்ட விஷயங்களைக் கக்கிவிட்டான் கஸாவ்.
இந் நிலையில் இந்தியா வந்துள்ள எப்பிஐ மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவினரும் அவனிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகள் குறித்து நாங்கள் தரும் தகவல்களை விட நேரில் அவனிடமே விசராணை நடத்தி பாகிஸ்தானின் தொடர்புகள் குறித்து விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அமெரிக்காவிடம் இந்தியா கூறிவிட்டது.
முன்னதாக தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் அமெரிக்கர்கள் பலியானது குறித்து எப்பிஐயும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கஸாவ் எந்த இடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறான் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று முக்கிய நாடுகளின் தூதர்களை அழைத்து இந்திய வெளியுறவு அதிகாரிகள் கஸாவிடம் இருந்து கிடைத்த தகவல்களை அளித்தனர். பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளிடம் தாங்கள் பெற்ற பயிற்சி, இந்தப் பயிற்சியில் ஐஎஸ்ஐயின் பங்கு ஆகியவை குறித்து கஸாவ் கூறிய விவரங்களை இந்த நாடுகளிடம் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications