பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு கண்துடைப்பு: ஜெ.

இதுகுறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அளவுக்கும், டீசலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அளவுக்கும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதில் இருந்து, எந்த அளவுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
4.6.2008 அன்று கச்சா எண் ணெய் விலை பேரலுக்கு 147 டாலர் அளவுக்கு அதிகரித்துவிட்டது என்ற காரணத்தைக் காட்டி, மத்திய அரசு பெட்ரோல் விலையை 5 ரூபாய் அளவிற்கும், அதாவது 50 ரூபாய் 52 பைசாவில் இருந்து 55 ரூபாய் 64 பைசாவாகவும்;
டீசல் விலையை 3 ரூபாய் அளவிற்கும், அதாவது 34 ரூபாய் 48 பைசாவில் இருந்து 37.44 பைசாவாகவும்; எரிவாயு விலையை 50 ரூபாய் அளவிற்கும், அதாவது 288 ரூபாய் 10 பைசாவில் இருந்து 338 ரூபாய் 10 பைசாவாகவும் உயர்த்தியது.
தற்போது கச்சா எண் ணெய் விலை சர்வதேச அளவில், பேரலுக்கு 147 டாலரிலிருந்து சுமார் 43 டாலர் அளவுக்கு சரிந்தி ருக்கும் இத்தருணத்தில், பெட்ரோலின் விலை லிட்ட ருக்கு வெறும் 5 ரூபாய் என்ற அளவிலும், டீசலின் விலை லிட்டருக்கு வெறும் 2 ரூபாய் என்ற அளவிலும் குறைத்து மக்களை மத்திய அரசு பெரிதும் ஏமாற்றியுள்ளது.
சமையல் எரிவாயு வின் விலை குறைக்கப்படவேயில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ யின் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கும் இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்னும் அதிக அளவிற்கு குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு, சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதைச் செய்ய வில்லை. மத்திய அரசின் இது போன்ற ஏமாற்று செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை எவ்வளவாக இருந்ததோ, அந்த அளவிற்கு மீண்டும் கொண்டு வரும் வகையில் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications