பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு கண்துடைப்பு: ஜெ.

இதுகுறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அளவுக்கும், டீசலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அளவுக்கும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதில் இருந்து, எந்த அளவுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
4.6.2008 அன்று கச்சா எண் ணெய் விலை பேரலுக்கு 147 டாலர் அளவுக்கு அதிகரித்துவிட்டது என்ற காரணத்தைக் காட்டி, மத்திய அரசு பெட்ரோல் விலையை 5 ரூபாய் அளவிற்கும், அதாவது 50 ரூபாய் 52 பைசாவில் இருந்து 55 ரூபாய் 64 பைசாவாகவும்;
டீசல் விலையை 3 ரூபாய் அளவிற்கும், அதாவது 34 ரூபாய் 48 பைசாவில் இருந்து 37.44 பைசாவாகவும்; எரிவாயு விலையை 50 ரூபாய் அளவிற்கும், அதாவது 288 ரூபாய் 10 பைசாவில் இருந்து 338 ரூபாய் 10 பைசாவாகவும் உயர்த்தியது.
தற்போது கச்சா எண் ணெய் விலை சர்வதேச அளவில், பேரலுக்கு 147 டாலரிலிருந்து சுமார் 43 டாலர் அளவுக்கு சரிந்தி ருக்கும் இத்தருணத்தில், பெட்ரோலின் விலை லிட்ட ருக்கு வெறும் 5 ரூபாய் என்ற அளவிலும், டீசலின் விலை லிட்டருக்கு வெறும் 2 ரூபாய் என்ற அளவிலும் குறைத்து மக்களை மத்திய அரசு பெரிதும் ஏமாற்றியுள்ளது.
சமையல் எரிவாயு வின் விலை குறைக்கப்படவேயில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ யின் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கும் இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்னும் அதிக அளவிற்கு குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு, சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதைச் செய்ய வில்லை. மத்திய அரசின் இது போன்ற ஏமாற்று செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை எவ்வளவாக இருந்ததோ, அந்த அளவிற்கு மீண்டும் கொண்டு வரும் வகையில் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications