சர்தாரியை பிரணாப் மிரட்டியதாக பாக்.கில் வதந்தி

தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவன் சயீத், மெளலானா மசூத் ஆசார் உள்ளிட்ட 20 தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை அமெரி்காவும் ஒரு பக்கம் நெருக்கி வருகிறது.
இந்த நிலையில், நேற்று பிரணாப் முகர்ஜி, சர்தாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு போர் தொடுப்போம் என மிரட்டியதாக பாகிஸ்தானில் செய்தி பரவியது. ஆனால் இது அப்பட்டமான வதந்தி, திசை திருப்பும் செயல் என மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை திசை திருப்ப, குழப்பம் விளைவிக்க பாகிஸ்தான் முயலுகிறது. அதுதான் இந்த மிரட்டல் தொலைபேசித் தகவல்.
கடந்த மே மாதம்தான் நான் சர்தாரியுடன் கடைசியாகப் பேசினேன். அதேபோல அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷியுடன் பேசினேன். அவ்வளவுதான்.
சர்தாரியை நான் மிரட்டினேன் என்ற வதந்தி வெளியானவுடனேயே உரியவர்களுக்கு அதை விளக்கி விட்டோம். பாகிஸ்தான் நிர்வாகத்திற்கும் விளக்கி விட்டோம். அப்படி ஒரு போனே நான் செய்யவில்லை என்பதை உரியவர்களுக்குத் தெரிவித்து விட்டோம்.
இப்படி ஒரு வதந்தியை பாகிஸ்தான் அரசு நம்பி விட்டதாக அறிந்து நான் கவலை அடைந்தேன். எதிர்காலத்தில், இப்படிப்பட்ட தவறான தொலைபேசி அழைப்புகளை நம்பி பாகிஸ்தான் அரசு எதிர்காலத்தில் தவறுதலான நடவடிக்கைகளை எடுக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மேலும் இந்தியா மிரட்டுகிறது என்று மக்களை குழப்பவும், பதட்டத்தை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயலுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி.
முன்னதாக பிரணாப் முகர்ஜி பேசியதாக கூறி வந்த தொலைபேசி அழைப்பை சரியாக உறுதி செய்து கொள்ளாமல் பாகிஸ்தான் அதிகாரிகள், அதிபர் சர்தாரிக்கு கொடுத்து விட்டதாக தெரிகிறது. அதில் பேசிய நபர் சர்தாரியையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. அதே நபர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸிடமும் பேச முயன்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பிரணாப் முகர்ஜி மிரட்டியதாக வந்த தகவலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளப் போவதாகவும் வேகமாக செய்திகள் பரவியதால் நேற்று பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பில் ஆழ்ந்தது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications