For Quick Alerts
For Daily Alerts
Just In
ஏப்ரல்- மே மாதத்தில் லோக்சபாவுக்கு தேர்தல்: கோபாலசாமி
டெல்லி: ஏப்ரல் - மே மாத வாக்கில் லோக்சபா தேர்தல் நடைபெறக் கூடும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், லோக்சபா தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல்- மே மாதத்தில்தான் நடைபெறும். மிகவும் அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற நிலை இப்போது தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படவில்லை.
வழக்கமாக, அரசின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடுவது நடைமுறையில் உள்ளது.
வழக்கமான காலகட்டத்தில்தான் தேர்தல் நடைபெறும்.
தேர்தலை முன்கூட்டியே நடத்துவதில் சிக்கல் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்று நான் சொல்வேன் என்றார் கோபாலசாமி.
Comments
Story first published: Monday, December 8, 2008, 10:48 [IST]