விபசாரம்: நடிகர்-துணை நடிகை கைது
சென்னை: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட துணை நடிகை, அவர்களுக்கு உதவிய புரோக்கர்-நடிகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துணை கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் செல்லப்பன் தலைமையில் விபசாரத் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை நகரில் விபச்சாரத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கணபதி (28) என்ற புரோக்கர் துணை நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதை அறிந்த போலீசார் அவரை வடபழனி பஸ் நிலையத்தில் வைத்து மடக்கினர்.
அவர் தந்த தகவலின்பேரில் நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சினிமா மற்றும் டி.வியில் நடிக்கும் நெற்குன்றத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (32) மற்றும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த சித்ரா (30) ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்ட நெற்குன்றத்தை சேர்ந்த இந்திரா (30) என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
புரோக்கர் கணபதி லீ என்ற படத்தில் நடித்தவர். இப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கிறார். மேலும் ராஜ ராஜேஸ்வரி, அது மட்டும் ரகசியம் ஆகிய டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.
கைதான ஜெயலட்சுமி வீரன் மகள், பேரழகன், மூணாறு, குயிலு உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
இவர்களோடு சேர்த்து மதுரையை சேர்ந்த பாலாஜி பாபு (24) என்ற புரோக்கரும் பிடிபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications