தேசப் பொருளாதாரம் பாதுகாப்பாக உள்ளது – ரிசர்வ் வங்கி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்த மோசமான பொருளாதாரச் சூழலிலும் இந்தியா தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த ஆண்டு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது நாட்டின் தலைமை வங்கி.
இன்றைக்கு நாட்டில் கடன் தேவை அதிகரித்து வருகிறது. இந்தக் கடன் தேவையின் தன்மையைக் கவனித்து அதைப் பூர்த்தி செய்ய வேண்டியது வங்கிகளின் வேலைதான்.
வங்கிகள் எப்போதுமே தொலைநோக்குப் பார்வையுடன், பேரியல் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
இன்றைய சூழலில் இந்திய நிதிச் சந்தை பாதுகாப்பாகவே உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்தியப் பொருளாதாரம் அத்தனை சுலபத்தில் வீழ்ந்துவிட முடியாத அளவு பாதுகாக்கப்பட்டுள்ளது, என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications