புஷ் மீது ஷூ வீசிய நிருபரை ஆதரித்த பெங்களூர் ஊழியருக்கு சிக்கல்
பெங்களூர்: பாக்தாத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசிய ஈராக் நிருபர் முன்டாசர் அல் ஜய்தியை ஆதரித்துப் பேசிய பெங்களூர் நபரை போலீஸார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பெங்களூர் போஸ்ச் நிறுவனத்தின் கீழ் வரும் மோட்டார் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜமீல்.
இவர் தனது சக ஊழியர்களிடம் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் நிருபரைப் புகழ்ந்து பேசியுள்ளார். இதையடுத்து ஊழியர்கள் சிலர் போலீஸில் இதைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இணை ஆணையர் கோபால் ஓசூர் கூறுகையில், அவரை நாங்கள் கைது செய்யவில்லை. அவரிடம் சில கேள்விகளைக் கேட்டு விசாரித்து வருகிறோம்.
அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அவர் மீதான சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக விசாரணைக்கு அழைத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications