இந்தியாவுக்கு ரஷ்யா 80 ஹெலிகாப்டர்களை தருகிறது
மாஸ்கோ: இந்தியாவுக்கு 80 எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்குகிறது. இவற்றின் மதிப்பு 1.5 பி்ல்லியன் டாலர்கள் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.
இதுகுறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பெடரல் ராணுவ, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஏஜென்சியின் இயக்குநர் மிக்கயீல் டிமிட்ரியேவ் கூறுகையில், இதுதொடர்பான ஒப்பந்தத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சகமும், ரஷ்யாவைச் சேர்ந்த ரோசோபோரோன் எக்ஸ்போர்ட் நிறுவனமும் டெல்லியில் கடந்த டிசம்பர் 5ம் தேதி கையெழுத்திட்டுள்ளன.
ரஷ்ய அதிபர் மெத்வதேவ் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையி்ல இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி எம்.ஐ -17 ரக ஹெலிகாப்டர்களை 80ஐ இந்தியா கொள்முதல் செய்யும். இது ராணுவ பயன்பாட்டுக்கானது. 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இது இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.
இந்தியப் பாதுகாப்புப் படையினருக்காக இது வாங்கப்படுகிறது.
ஹெலிகாப்டர்களின் விலை மற்றும் அவற்றைப் பயன்படுத்தவுள்ளோருக்கான பயிற்சிக்கான தொகை ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள் ஆகும் என்றார் அவர்.
ரஷ்யாவின் எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பே எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் ஆகும்.
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ராணுவ ஹெலிகாப்டர் இது.
இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தொடர்ந்து 700 கிலோமீட்டர் வரை செல்லும் தன்மை வாய்ந்தது.
இதன் கேபினில், 4000 கிலோ எடையுள்ள சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும். மேலும், ஹெலிகாப்டருக்கு வெளியே 4500 கிலோ எடையுள்ள சரக்குகளைப் பொருத்தவும் முடியும்.
ஹெலிகாப்டர் கேபினில் 36 பேர் வரை அமர்ந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications