சென்னை அதிரடிப்படைக்கு என்.எஸ்.ஜி. கமாண்டோ பயிற்சி
சென்னை: சென்னை சிறப்பு அதிரடிப்படையை புதுப் பொலிவுடன் மாற்றியமைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. படையின் பெயர் மாற்றப்படுவதோட இந்த அதிரடிப்படையினருக்கு, என்.எஸ்.ஜி. கமாண்டோ படையின் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் தத்தமது காவல்படைகளின் பலத்தையும், அவற்றின் செயல் திறனையும் மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளன.
மகாராஷ்டிர அரசு, போர்ஸ்-1 என்ற பெயரில் புதிய கமாண்டோப் படையை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. அந்தப் படையினருக்கு அதி நவீன துப்பாக்கிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்தநிலையில் சென்னை சிறப்பு அதிரடிப்படையையும் புதுப் பொலிவுடன் மாற்றியமைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் படைக்கு புதிய பெயர் சூட்டவும், என்.எஸ்.ஜி. கமாண்டோ பயிற்சியை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தவிர அதி நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் இந்த அதிரடிப்படைக்கு தரப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையி்ல், அதிரடிப்படையை மாற்றி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன. அவர்களுக்கு புதிய நவீன ஆயுதங்களை வழங்கவுள்ளோம். மேலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் அதிகரிக்கவுள்ளோம் என்றார்.
இதுதவிர அதிரடிப்படைக்கு புதிய பெயர் ஒன்றும் சூட்டப்படவுள்ளதாம்.
காவல்படைகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்த திட்டங்களை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு சமீபத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தின்போது தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடிப்படை புதுப் பொலிவு பெற்றாலும் கூட, கூடுதலாக வீரர்களை நியமிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லையாம். தற்போதைய அளவிலேயே இந்த அதிரடிப்படை தொடர்ந்து செயல்படும். சென்னை காவல்துறையின் ஆயுதப் பிரிவின் கீழேயே இது செயல்படும். அதில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
தமிழ்நாடு கமாண்டோப் படையுடன் இணைந்து இந்த சிறப்பு அதிரடிப்படையினர் செயல்படுவர். தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தால் அவற்றை சமாளிக்கக் கூடிய திறமை இவர்களுக்கு உண்டு என்று கால்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல, சென்னை நகர வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் அகற்றும் பிரிவையும் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கவுள்ளனர். சென்னையில் தற்போது இந்தப் படையில் ஐந்து குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் நான்கு நிபுணர்கள் உள்ளனர். இவர்களுக்கு என்.எஸ்.ஜி. படையிடமிருந்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மேலும், அதி நவீன கருவிகளும் வழங்கப்படவுள்ளன.
வெடிகுண்டுகளை அகற்றும் குழுவினருக்கு தற்போது தமிழ்நாடு கமாண்டோப் படைதான் பயிற்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications