உ.பியில் கடும் குளிர் - இதுவரை 21 பேர் பலி - போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் நிலவியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. உ.பியில் இதுவரை குளிருக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.
பரேலி மாவட்டம் பரீத்பூர் சரகத்தில் பணியில் இருந்த மாவட்ட வன அதிகாரி ஹாசிலா பிரசாத் (40) குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்தார்.
நேற்று காலை உ.பி மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்தது.












Click it and Unblock the Notifications