சென்செக்ஸ் டல்- வங்கி பங்குகளோ கூல்!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக வர்த்தகம் வீழ்ச்சியைச் சந்தித்தது. துவக்கத்திலிருந்தே சரிவில் பயணித்த சென்செக்ஸ் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 131 புள்ளிகளை இழந்து 9555-ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 36 புள்ளிகள் குறைந்து 2932 ஆக இருந்தது.
மேடாஸ் விவகாரம், உலக வங்கி விதித்த தடை வெளியானது மற்றும் தலைமை மாற்றம் என சிக்கலில் தவிக்கும் சத்யம் நிறுவனப் பங்குகள் இன்று மிகவும் சரிந்தன. அதிகபட்சமாக 19 சதவிகிதம் குறைந்து 119 ரூபாய்க்கு கைமாறின.
ஆனால் வங்கித் துறைப் பங்குகள் அனைத்துமே இன்று ஓரளவு லாபத்துடன் விற்பனையாகின. ஸ்டேட் வங்கி, கனரா வங்கி போன்றவற்றின் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
டாடா மோட்டார்ஸ், டிஎல்எப், ஜெய்ப்பிரகாஷ் அஸோசியேட்ஸ் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
இப்போதைய சந்தை நிலவரம் சென்சசெக்ஸ்: 9555.16 (-131.59), நிப்டி: 2932.35 (-36.30).











Click it and Unblock the Notifications