பரஸ்பர நிதியை நிமிர்த்த அரசு புது முடிவு!
டெல்லி: பரஸ்பர நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்டவும், மீண்டும் அந்தத் துறைக்கு புத்துயிர் அளிக்கவும் மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 'நவ ரத்தினங்களான' லாபம் தரும் பொதுத்துறை நிறுவனத்தின் உபரிப் பணத்தில் 30 சதவிகிதம் இனி பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
இந்த 'நவரத்தினங்கள்' தவிர, அவற்றுக்கு அடுத்த நிலையில் உள்ள 'மினி ரத்தினங்களான' நடுத்தர லாபம் பார்க்கும் அரசுத் துறை நிறுவனங்களின் உபரி வருவாயில் ஒரு பகுதியும் கூட பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
இந்த 2008ம் ஆண்டு மட்டும் 36 பரஸ்பர நிதி நிறுவனங்களில் 155000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, மக்களை அதிரிச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், வரும் நிதியாண்டில் பரஸ்பர நிதி அமைப்பின் மீதே மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் உள்ளதால், அதைத் தவிர்க்க இந்த புதிய முடிவை அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்த ஆலோசனை நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது. முறையான அறிவிப்பை இன்று பிரதமரின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் லாபகரமான முதலீட்டுக்கு ஏற்றவைதான் என்பதை உறுதிப்படுத்தவே இந்த ஏற்பாடு என்று சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications