ஏப்.- மே மாதத்தில் பொதுத் தேர்தல் வரலாம்: கோபாலசாமி
டெல்லி: லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாத வாக்கில் பொதுத் தேர்தல் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
டெல்லியில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏப்ரல், மே மாத வாக்கில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று கருதுகிறேன்.
மார்ச் மாதம் அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் காலமாகும். எனவே அதற்குப் பிறகுதான் தேர்தலை நடத்த முடியும். ஏப்ரல், மே மாதம்தான் தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஜனவரி மாத மத்தியில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவுள்ளோம். அதன் பிறகு தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தலை 7 கட்டங்களாக, அமைதியான முறையில் நடத்தி முடித்திருப்பது திருப்தி அளிக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு வாக்குப் பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் சமயத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிக அளவில் இல்லாததும் மகிழ்ச்சியைத் தருகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் அங்கு 43 சதவீத வாக்குகளே பதிவானது. ஆனால் இந்த முறை 61.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது மிகப் பெரிய விஷயமாகும்.
மக்களிடையே பய உணர்வு போய் விட்டது என்பதையே இது காட்டுகிறது. இது சந்தோஷமானது என்றார் கோபாலசாமி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications