காஸா முனையில் இஸ்ரேல் வெறித் தாக்குதல் - 205 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காஸா முனையில், இஸ்ரேல் நடத்திய வெறித்தனமான குண்டு வீச்சில் 205 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காஸா முனைப் பகுதியில் உள்ள, 40க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பின் நிலைகளையும், போலீஸ் தலைமையகத்தையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல் விமானப்படை சரமாரியாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

காஸா முனை முழுவதையும் இஸ்ரேலியப் படைகள் சல்லடையாக துளைத்தெடுத்து விட்டன. இந்த கொலை வெறித் தாக்குதலில் 205 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக காஸா முனைப் பகுதியிலிருந்து இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் பிரிவினர் ராக்கெட் வீசித் தாக்கி வந்தனர். இதையடுத்தே இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதலை தொடுத்துள்ளன. தேவைப்பட்டால் இது தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஹமாஸ் இயக்கத்தினரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி மக்கள்தான் பலியாகியுள்ளனர்.

மேலும், ஹமாஸ் இயக்கத்தின் காவல்துறை தலைமையகமும் சீரழிந்து விட்டது. காஸா பகுதி போலீஸ் தலைவர் தெளபீக் ஜாபரும் இதில் உயிரிழந்தார் என தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை அதிகரிப்போம். இஸ்ரேலுக்குள் தற்கொலைப் படையினரை அனுப்புவோம் என ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பவ்சி போர்ஹாம் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+