மணல் கடத்தல், அரிசி கடத்தல், கட்டப்பஞ்சாயத்து தான் திமுக அரசின் சாதனை: ஜெ.
திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து நேற்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா.
பெருங்குடி யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடையே ஜெயலலிதா பேசியதாவது:
கருணாநிதி அரசின் நிர்வாகத் திறமையின்மை, குடும்பத் தலையீடு காரணமாக பல்வேறு சோதனைகளுக்கும், இன்னல்களுக்கும் தமிழகமக்கள் ஆளாகி உள்ளனர்
மு.க.அழகிரி யின் தவறான நடவடிக்கைகள் காரணமாக மதுரை மக்கள் கூடுதல் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். கருணாநிதியின் 31 மாத ஆட்சியில் செய்த சாதனைகள்தான் என்ன? தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சாட்சிகளை கலைத்து தனது மகனை விடுவித்தது சாதனையா? தினகரன் பத்திரிகை எரிக்கப்பட்ட தில் மூன்று உயிர்கள் பலியானது. அது தொடர்பான வழக்கை கிடப்பில் போட்டது சாதனையா?
மணல் கடத்தல், அரிசி கடத்தல், கட்டப்பஞ்சாயத்து இதுதான் திமுக அரசின் சாதனை. தமிழகத்தில் ஆட்சியதிகாரம் தவறாக பயன்படுத் தப்படுகிறது.
நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக தொழில் வளர்ச்சி பின்னோக்கி சென்றுவிட்டது. கட்டுமானப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். நெசவுத் தொழில் நசிந்து வருகிறது.
மின்வெட்டு காரணமாக மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ள தொழிற்பேட்டையில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். திருமங்கலம் மெட்டல் பவுடர் கம்பெனியில் திமுக தொழிற்சங் கத்தின் மிரட்டல் காரணமாக தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட் டத்தால் மக்கள் சொல் லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
தாழ்தளபேருந்து, சொகுசுபேருந்து என மதுரை மாவட்டத்தில் பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கருணாநிதி ஆட்சியின் நிர்வாகத்திறமையின்மையால் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கிவிட்டது. ஒளிமயமான தமிழகத்திற்கு திருமங்கலம் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார் ஜெயலலிதா.
தொடர்ந்து கைத்தறிநகர், நிலையூர், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.