For Quick Alerts
For Daily Alerts
Just In
வியாழக்கிழமை ஜார்ஜ் புஷ் 'கிளம்புகிறார்'
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் வருகிற வியாழக்கிழமை இரவு தனது பிரியாவிடை உரையை நாட்டு மக்களுக்கு நிகழ்த்துகிறார்.
இந்த உரையின்போது தான் அதிபர் பதவிக்காலத்தில் எடுத்த முடிவுகள், நடந்து கொண்ட விதம் ஆகியவற்றை விளக்கிப் பேசுவார் எனத் தெரிகிறது.
10 முதல் 15 நிமிடங்களுக்கு புஷ் பேசக் கூடும் எனத் தெரிகிறது. தேசிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மூலம் புஷ்ஷின் பேச்சு அமெரிக்கா முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் உலக நாடுகளின் பல்வேறு தொலைக்காட்சிகளும் இந்த பேச்சை நேரடியாக ஒளிபரப்பவுள்ளன.
வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியப் பிரதிநிதிகள் முன்னிலையில் அதிபர் பேசவுள்ளதாக செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Tuesday, January 13, 2009, 17:07 [IST]