சத்யம்: ஊழியர் எண்ணிக்கையிலும் கோல்மால்!
டெல்லி: சத்யம் நிறுவனத்தில் உண்மையிலேயே பணியில் உள்ள ஊழியர்கள் 40,000க்கும் குறைவுதான். ஆனால், 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை மிகைப்படுத்திக் காட்டி, அவர்களது பெயரில் ஊதியத்தை சுருட்டியதோடு, மனித வளத்துறையில் தங்கள் நிறுவனம் உலக அளவில் பெரியது எனக் காட்டி வந்துள்ளார் ராமலிங்க ராஜு.
இந்தத் தகவலை யாரும் புலனாய்ந்து சொல்லவில்லை. அதற்கான முயற்சிகளில் செபியும் மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறையும் இறங்கும் முன்பே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பவர் ராமலிங்க ராஜுவின் வலது கரமாகத் திகழ்ந்த சத்யம் முன்னாள் சிஎப்ஓ சீனிவாஸ் வட்லாமணி.
வட்லாமணி வாக்குமூலத்தின்படி, இந்த போலியான பணிகள் 2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்டனவாம். இந்த 13,000 பணியிடங்களுக்கான சம்பளம் என்ற வகையில் மாதந்தோறும் பல நூறு கோடிகளை ராஜு சகோதரர்களும் வட்லாமணியும் சுருட்டி வந்துள்ளனர்.
இந்தத் தொகையும் ராஜுவின் வெளிநாட்டு பினாமி கணக்குகளில்தான் வரவு வைக்கப்பட்டுள்ளதாம்.
இப்போது உண்மையிலேயே சத்யம் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் எவ்வளவு பேர்? அவர்களுக்குத் தரப்படும் சம்பளம் என்ன? மாதம் எவ்வளவு தொகை உண்மையிலேயே தேவைப்படும் என்ற விவரங்களைத் திரட்டுவதில் புதிய இயக்குநர் குழு மும்முரமாக உள்ளது.
சத்யம் நிறுவனம் உடனடியாக செலுத்த வேண்டியுள்ள கடன் தொகை, சம்பளமாகத் தரவேண்டிய தொகை என இந்த மாதச் செலவுக்கு உடனடியாக ரூ. 1,700 கோடி தேவைப்படுகிறதாம்.
வெளியிலிருந்து வர வேண்டிய தொகையும் இதற்கு இணையாக உள்ளதால் சமாளித்துவிடலாம் என்று நினைத்த இயக்குநர்கள் குழு, இப்போது உள்ளே போய் பார்த்த பிறகு, சத்யத்தை நிர்வகிப்பது அத்தனை சுலபமான காரியமில்லை எனப் புரிந்து திகைக்கிறது.
இப்போதைக்கு நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் பேரில் கடன் பெற முடிவெடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி இதற்கு ஒப்புக் கொண்டு பரிந்துரைத்தால்தான் சத்யத்துக்கு அந்தக் கடனைக்கூடத் தர பிற வங்கிகள் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது!.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications