சத்யம்: ஊழியர் எண்ணிக்கையிலும் கோல்மால்!
டெல்லி: சத்யம் நிறுவனத்தில் உண்மையிலேயே பணியில் உள்ள ஊழியர்கள் 40,000க்கும் குறைவுதான். ஆனால், 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை மிகைப்படுத்திக் காட்டி, அவர்களது பெயரில் ஊதியத்தை சுருட்டியதோடு, மனித வளத்துறையில் தங்கள் நிறுவனம் உலக அளவில் பெரியது எனக் காட்டி வந்துள்ளார் ராமலிங்க ராஜு.
இந்தத் தகவலை யாரும் புலனாய்ந்து சொல்லவில்லை. அதற்கான முயற்சிகளில் செபியும் மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறையும் இறங்கும் முன்பே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பவர் ராமலிங்க ராஜுவின் வலது கரமாகத் திகழ்ந்த சத்யம் முன்னாள் சிஎப்ஓ சீனிவாஸ் வட்லாமணி.
வட்லாமணி வாக்குமூலத்தின்படி, இந்த போலியான பணிகள் 2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்டனவாம். இந்த 13,000 பணியிடங்களுக்கான சம்பளம் என்ற வகையில் மாதந்தோறும் பல நூறு கோடிகளை ராஜு சகோதரர்களும் வட்லாமணியும் சுருட்டி வந்துள்ளனர்.
இந்தத் தொகையும் ராஜுவின் வெளிநாட்டு பினாமி கணக்குகளில்தான் வரவு வைக்கப்பட்டுள்ளதாம்.
இப்போது உண்மையிலேயே சத்யம் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் எவ்வளவு பேர்? அவர்களுக்குத் தரப்படும் சம்பளம் என்ன? மாதம் எவ்வளவு தொகை உண்மையிலேயே தேவைப்படும் என்ற விவரங்களைத் திரட்டுவதில் புதிய இயக்குநர் குழு மும்முரமாக உள்ளது.
சத்யம் நிறுவனம் உடனடியாக செலுத்த வேண்டியுள்ள கடன் தொகை, சம்பளமாகத் தரவேண்டிய தொகை என இந்த மாதச் செலவுக்கு உடனடியாக ரூ. 1,700 கோடி தேவைப்படுகிறதாம்.
வெளியிலிருந்து வர வேண்டிய தொகையும் இதற்கு இணையாக உள்ளதால் சமாளித்துவிடலாம் என்று நினைத்த இயக்குநர்கள் குழு, இப்போது உள்ளே போய் பார்த்த பிறகு, சத்யத்தை நிர்வகிப்பது அத்தனை சுலபமான காரியமில்லை எனப் புரிந்து திகைக்கிறது.
இப்போதைக்கு நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் பேரில் கடன் பெற முடிவெடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி இதற்கு ஒப்புக் கொண்டு பரிந்துரைத்தால்தான் சத்யத்துக்கு அந்தக் கடனைக்கூடத் தர பிற வங்கிகள் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது!.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications