மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள்-காக்க எஸ்வி சேகர் கோரிக்கை

முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தேன். அங்கு என்னை சந்தித்த சில தமிழர்கள் தவறான ஏஜெண்டுகள் மூலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். உரிய சம்பளமும், வசதிகளும் கிடைக்கவில்லை என்றும், நாடு திரும்பவும் வழியில்லாமல் தவித்து வருவதாகக் கூறினர்.
மலேசிய இந்தியத் தூதரகமும், வட இந்தியாவைச் சேர்ந்த தூதரும் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அவர்களிடம் இருந்து அதிகம் வந்தது. விமான கட்டணத்துக்கு கூட காசு இல்லாமல் சுமார் 1,300 தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக பெண்கள் 5 பேர் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அவர்களில் 3 பேர் 12ம் தேதி ஒரு வழியாக திரும்பி வந்துவிட்டார்கள்.
அவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதித்தால் நானும், சில எம்எல்ஏக்களும் மலேசியாவிற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications