மூன்றே மாதங்களில் ரூ.5000 கோடி காணவில்லையாம்!
ஹைதராபாத்: சத்யம் அதிர்ச்சி இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை. ஜஸ்ட் 3 மாதங்களில், அதாவது ஓரு காலாண்டில் இந்த நிறுனத்தில் காணாமல் போயுள்ள தொகை எவ்வளவு தெரியுமா... மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்... ரூ.5000 கோடி!!
அதுவும் ரொம்ப முன்னாள் காணாமல் போன தொகை அல்ல... கடந்த செப்டம்பர் மாதக் கணக்குப்படி இவ்வளவு தொகை காணாமல் போயுள்ளது.
பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் தணிக்கை செய்துகொடுத்த கணக்குப்படி, செப்டம்பர் 2008-ல் சத்யம் நிறுவனத்தின் நீண்டகால டெபாஸிட்டுகளாக ரூ.3300 கோடியும், வட்டித் தொகையாக ரூ.300 கோடியும், நடப்புக் கணக்கு ரொக்கமாக ரூ.1800 கோடியும் இருந்துள்ளது.
இந்தப் பணம் கணக்கில் இருந்திருந்தால், சத்யம் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய நெருக்கடி வந்திருக்காது.
வைப்புத் தொகை எந்தெந்த வங்கிகளில் இருந்ததோ அந்த வங்கிகளிடமிருந்து நேரடியாக கணக்கு விவரங்களைப் பெற்றே பிரைஸ் வாட்டர் ஹவுஸ் தணிக்கை செய்துள்ளது. ஆனால் அதன் பிறகுதான் மொத்தப் பணமும் 'காணாமல்' போயுள்ளது!
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், இந்த டெபாஸிட்டுகள் அனைத்துமே ஜனவரி 7-ம் தேதியோடு முதிர்வு பெறுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேதியில்தான் ராஜூ தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications