Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை சுதந்திர தினத்தன்று நார்வேயில் பிப். 4ல் தமிழர்கள் தீப்பந்தப் பேரணி

Subscribe to Oneindia Tamil

Youngstorgetm arcade
கொழும்பு: இலங்கையின் 61வது சுதந்திர தினமான பிப்ரவரி 4ம் தேதி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் தீப்பந்தங்கள் ஏந்தி ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனர்.

இந்த பேரணியில் வயது வித்தியாசமின்றி ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கலந்து கொண்டு, உறவுகளின் உயிர்காக்கவும் உரிமை மீட்கவும் உரத்துக் குரல் எழுப்புவோம் என நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஒஸ்லோவின் யங்ஸ்டார்கெட் என்ற இடத்தில், மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த தீப்பந்தப் பேரணி, நார்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நிறைவடையவுள்ளது.

இதுதொடர்பாக தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள்.

இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 61 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 61 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு

இந்த நாளை கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவோம்.

உடனடிப் போர் நிறுத்தத்திடக் கோரியும், தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+