For Quick Alerts
For Daily Alerts
Just In
டிஎல்எப் கணக்குகளில் வருமான வரித்துறை சந்தேகம்!
2005-06-ம் ஆண்டுக்கான இந்நிறுவனத்தின் கணக்குகள் முறையாக இல்லை என்றும், வரி ஏய்ப்புக்காக, லாபத்தைக் குறைத்துக் காட்டியிருப்பதாகவும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎல்எப் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்ததில் பல வருமான ஆதாரங்களை அந்நிறுவனம் மறைத்திருப்பதாகத் தெரிகிறது. வரி ஏய்ப்புக்காக நஷ்டக் கணக்கு காட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே முழுமையான சோதனை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது உண்மைதான், என்றார்.
டிஎல்எப்பின் அனைத்துக் கணக்குகளையும் மறு தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Comments
Story first published: Monday, February 2, 2009, 10:06 [IST]