ஊட்டி யூகலிப்டஸ் ஆலையில் தீவிபத்து - ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டியில், யூகலிப்டஸ் எண்ணை தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார்.
ஊட்டி அருகே உள்ள கவர்னர் சோலையில் உள்ள அகநாடு மந்து என்ற இடத்தில் சுகுமாரி என்பவருக்குச் சொந்தமான யூகலிப்டஸ் எண்ணை தயாரிக்கும் ஆலை உள்ளது.
இந்த ஆலையில், சரவணன் (35) மற்றும் இன்னொருவர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் எண்ணை காய்ச்சும் ஷெட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் அங்கிருந்த சரவணன் தீயில் கருகி உயிரிழந்தார். அவருடன் இருந்தவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள எண்ணை மற்றும் பொருட்கள் நாசமாகின.












Click it and Unblock the Notifications