For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி பாஸ்போர்ட்டில் சவுதியில் இருந்து திருச்சி வந்த இளைஞர் கைது

By Sridhar L
Google Oneindia Tamil News

திருச்சி: சவுதியில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சி வந்த புதுக்கோட்டை இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி ஏர்போர்ட்டில் இமிகிரேஷன் அதிகாரிகள் விமான பயணிகளிடம் வழக்கம் போல் பாஸ்போர்ட் சோதனை நடத்தினர்.

அப்போது, சவுதியில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது அலி மகன் முகமது அன்சாரி (38) என்பவர் வந்தார்.

அவரிடம் சோதனை செய்த போது, அவர் திருச்சி புத்தூர்மந்தை முகமது அலி அன்சார் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து முகமது அன்சாரி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏர்போர்ட் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து முகமது அன்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X