லோக்சபா கூட்டத் தொடரின் கடைசி நாளில் பிரதமர் பங்கேற்கிறார்
டெல்லி: நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26ம் தேதியுடன் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைகிறது. அந்த நாள்தான் நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி நாளும் ஆகும்.
தற்போதைய கூட்டத் தொடரில் பிரமதர் பங்கேற்கவில்லை. இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருவதால் அவரால் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளில் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரவுள்ளார். அன்றைய தினம் சுருக்கமாக அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.
தனது அரசுக்கும், தனக்கும் ஆதரவு அளித்ததற்காக மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து பிரதமர் பேசுவார்.
மேலும் திங்கள்கிழமை முதல் 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து பணிகளைத் தொடங்கவுள்ளார் பிரதமர்.
இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பிரதமரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
சோனியாவைத் தொடர்ந்து அவரது அரசியல் செயலாளர் அகமது படேலும் பிரதமரை சந்தித்துப் பேசினார். லோக்சபா தேர்தல் குறித்து அப்போது பிரதமருடன், படேல் ஆலோசனை நடத்தினார்.
தற்போது பிரதமர் மன்மோகன் சிங் 3 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்தபடி தனது பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications