புதுச்சேரி சிறையில் சீமானை சந்தித்த பாரதிராஜா
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமானை இயக்குனர்கள் பாரதிராஜா இன்று நேரில் சென்று சந்தித்தார்.
புதுச்சேரில் கடந்த 12ம் தேதி நடந்த கூட்டத்தில் இயக்குனர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டப்பட்டார். இதையடுத்து புதுச்சேரி போலீசார் அவர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அவர் நெல்லை போலீசில் சரணடைந்தார்.
பின்னர் புதுச்சேரி போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க சீமான் அவரிசம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் காலாப்பட்டில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அவரை நேற்று அவரை இயக்குனர் மணிவண்ணன் சென்று சந்தித்தார். மணிவண்ணனை தொடர்ந்து சீமானை சந்திப்பதற்காக இயக்குனர்கள் பாரதிராஜா, ஓவியர் புகழேந்தி ஆகியோர் இன்று பிற்பகல் புதுச்சேரிக்கு வந்தனர்.
அவர்களை இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த புதுச்சேரி பாவாணன், சுகுமாறன், அழகிரி, லோகு ஐயப்பன் ஆகியோர் வரவேற்றனர்.
சிறை நிர்வாகத்தினரிடம் முறைப்படி அனுமதி பெற்று அவர்கல் பிற்பகலில் இயக்குனர் சீமானை அனைவரும் சந்தித்து பேசினார்கள்.