பள்ளியில் லேப்-டாப் திருடிய மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே படிக்கும் பள்ளியிலேயே கதவை உடைத்து லேப்-டாப் திருடிய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை அருகே மேலுருக்கு பக்கத்தில் எஸ்.கல்லம்பட்டி என்ற கிராமம் உள்ளது. சமீபத்தில் இங்குள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தமிழக அரசு மூன்று லேப்-டாப் கம்ப்யூட்டர்களை வழங்கியது.

தினமும் மாணவர்களுக்கு அதில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அதை தலைமை ஆசிரியரின் பீரோவில் வைத்து பூட்டிவிடுவர். இதே போல் சம்பவத்துக்கு முந்தைய வெள்ளி கிழமை வகுப்புகள் முடிந்து லேப்-டாப் பீரோவில் வைக்கப்பட்டது.

சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை முடிந்து திங்கட்கிழமை பள்ளி வந்த தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சி. பீரோவை உடைத்து அதிலுள்ள லேப்-டாப்க்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் மேலூர் போலீசில் புகார் செய்தார். போலீசாருக்கு பள்ளியில் இருக்கும் மாணவர்கள் சிலர் மேல் சந்தேகம் வந்தது.

அப்போது அதே ஊரை சேர்ந்த பிரபு என்ற 8ம் வகுப்பு மாணவரை போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த மாணவன் தானும் தனது நண்பர்களும் தான் திருடியதாக ஒப்புக்கொண்டான்.

லேப்-டாப்க்களை தங்களது வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பிரபு மற்றும் அவனது நண்பர்கள் வீரன், அருண் மற்றும் மாணிக்கம் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+