மார்ச் 3ம் தேதிக்குள் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வக்கீல்கள் கெடு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் வக்கீல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிஜிபி, போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் மீது மார்ச் 3ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி, ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிஷன் தனது விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது.
நேற்று வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் மாலதி உள்ளிட்டோர் ஸ்ரீகிருஷ்ணாவை சந்தித்து மனு அளித்தனர், தத்தமது தரப்பு நியாயத்தை விளக்கினர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அங்கு சேதமடைந்த வாகனங்களையும், கட்டட பகுதிகளையும் பர்னிச்சர்களையும் பார்வையிட்டார். எரிக்கப்பட்ட காவல் நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.
இன்றும் தனது விசாரணையை தொடர்ந்து நடத்தினார் ஸ்ரீகிருஷ்ணா. இன்று காலை மூத்த வக்கீல்களை நீதிபதி சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
இன்றைய விசாரணையின்போது, மூத்த வக்கீல்கள் தங்களது கோரிக்கைகளை மீண்டும் நீதிபதியிடம் வலியுறுத்தினர்.
குறிப்பாக டிஜிபி, கமிஷனர் ஆகியோர் மீது உடனடியாக நவடிக்கை எடுக்க வேண்டும். மார்ச் 3ம் தேதிக்குள் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இன்றைய விசாரணையை முடித்துக் கொண்டு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை அவர் உச்சநீதிமன்ற பெஞ்சி்டம் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் 3ம் தேதி உச்சநீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்கும். இதைப் பொறுத்து வக்கீல்களின் போராட்டம் விலக்கப்படுமா, காவல்துறை அதிகாரிகள் மாற்றப்படுவார்களா என்பது தெரிய வரும்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications