12 தொகுதிகளில் தனித்துப் போட்டி - கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை
கோவை: தமிழகத்தில் 12 லோக்சபா தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் கணியூரில் கடந்த மே மாதம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.
மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக 5 உயரமுள்ள தீரன் சின்னமலை சிலை மாநாட்டு பந்தலில் நிறுவப்பட்டு கொங்கு இன மக்களின் கடவுளாக வழிபாடு செய்யப்பட்டது.
வழிபாடு செய்யப்பட்ட தீரன் சின்னமலை சிலை கொங்கு இன மக்களின் தரிசனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்ல நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை விசேஷ பூஜையுடன் ஊர்வல ஏற்பாடுகள் தொடங்கியது.
இதில் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி, மாநில பொது செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சி செயல்பாடுகள் குறித்து பின்னர் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கொங்கு நாடு முன்னேற்ற பேரவை கட்சியின் நிர்வாகிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பே நியமிக்கப்படுவார்கள். அதுவரை பேரவை நிர்வாகிகளே கட்சிப்பணிகளை கவனித்துக் கொள்வார்கள்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை 12 தொகுதிகளில் தனித்தே போட்டியிடும். பிற கட்சிகளில் இல்லாத அளவிற்கு படித்தவர்களின் பங்களிப்பு எங்கள் கட்சிக்கு அதிக அளிவில் உள்ளது.
கொங்கு மண்டலத்தில் பிற கட்சிகளை சார்ந்தவர்களும் எங்கள் கட்சியில் தொடர்ந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர். கொங்கு இன மக்களின் ஒற்றுமையின் வெளிப்பாடே அரசியல் மாநாட்டின் வெற்றிக்கு காரணமாகும்.
இந்த வெற்றியே தமிழகத்தின் பிற அரசியல் கட்சி தலைவர்கள் கொங்கு நாடு முன்னேற்ற பேரவையின் பக்கம் பார்வையை திரும்ப செய்துள்ளது.
கொங்கு மக்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்ல பாராளுமன்ற தேர்தலில் எங்களின் பலத்தை நிரூபிக்க பணியாற்றி வருகிறோம் என்றார்.
-
இவ்வளவு பயமா.. கரூரில் பட்டி பார்முலா புகார்.. செந்தில் பாலாஜி பகிரங்க சவால் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications