இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை: விடுதலைப் புலிகள்

லாகூரில் இலங்கை அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கு விடுதலைப் புலிகளும் காரணமாக இருக்கலாம் என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் சார்பில் லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் இதைச் செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் இதை முற்றிலும் நிராகரித்துள்ளனர் விடுதலைப் புலிகள். இதுகுறித்து விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் திலீபன் ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லாகூர் சம்பவத்திற்கு நாங்கள் காரணமல்ல. அங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும், எங்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது.
விடுதலைப் புலிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது தவறாகும்.
இலங்கை அரசு முற்றுகையிட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் எனும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது. அதை நிராகரிக்கிறோம்.
அதேபோல ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடையவும் மாட்டோம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், எங்களோடுதான் இருக்கிறார். அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளும் கூட எங்களுடன்தான் இருக்கின்றனர் என்றார் திலீபன்.
இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த தி டைம்ஸ் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றும் அல் கொய்தாவும்,அதன் துணை அமைப்புகளும்தான் இதை நடத்தியிருக்க முடியும் எனவும் அது தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அணி ஒன்றை இதுபோல தாக்குவதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், இந்திய அரசுக்கும், பிற கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கும் பலத்த எச்சரிக்கையை ஏற்படுத்துவதே இந்த தாக்குதலின் நோக்கமாகும் என்றும் அது தெரிவித்துள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications