சோனியாவை கேலி செய்து பேச்சு - நாஞ்சில் சம்பத் கைதாகிறார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகவும், சோனியா காந்தியை கேலி செய்து பேசியதாகவும் திருப்பூர் போலீஸார் மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்துளளனர். அவரைக் கைது செய்ய சென்னை வந்துள்ளனர்.

திருப்பூரில், மார்ச் 1ம் தேதி நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், சோனியா காந்தியை கேலி செய்யும் வகையிலும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீஸார், நாஞ்சில் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய சென்னை வந்துள்ளனர்.

எனவே இன்றைக்குள் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+