மதுரையில் பட்ட பகலில் ரவுடி வெட்டி கொலை
மதுரை: மதுரையில் பட்டபகலில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் லோகநாதன் (24). ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்த இவர் அடிக்கடி கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். இவருக்கும் சண்முகநாதபுரத்தை சேர்ந்த ராஜா, அசோக், ஜோதி கோஷ்டிக்கும் இடையே ஏற்கனவை முன்விரோதம் இருந்துள்ளது.
இதையடுத்து லோகநாதன் குடும்பத்தினர் அங்கிருந்து தத்தனேரிக்கு வந்துள்ளனர்.
இந் நிலையில் லோகநாதன் தத்தனேரியில் இருந்து ஆராம்பாளையம் தரைப்பாலம் வழியாக பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது.
இதையடுத்து லோகநாதன் உயிர்பிழைக்க அங்கிருந்து வெட்டு காயங்களுடன் ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளது. தகவலறிந்த போலீஸ் துணை கமிஷினர் தேன்மொழி, உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications