கன்னியாகுமரி கடலில் சீற்றம் - பெண் பலி - வீடுகள் இடிந்தன
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சீற்றம் ஏற்பட்டதில் ஒரு பெண் பலியானார், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. கடும் சூறாவளிக் காற்றும் வீசியது.
சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. நேற்று தோப்புகளையும், வீடுகளையும் சூழ்ந்த வெள்ளத்தால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்தன.
ராமன்துறையை சேர்ந்த அபிநேசியாள் (70) என்ற மூதாட்டி வீட்டுக்குள் கடல் நீர் புகுந்ததால் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications