சிசுக்களையும் துளைத்தெடுத்த சிங்களப் படையின் குண்டுகள்!

வன்னியின் மாத்தளன் பகுதியில் இலங்கைப் படைகள் வெள்ளிக்கிழமை நடந்த எறிகணைத் தாக்குதலில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் கொடூரமாக உயிரிழந்தனர்.
விஸ்வமடு, தியாரவில் என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான சிவதர்சனி என்ற கர்ப்பிணிப் பெண் மார்ச் 2ம் தேதி நடந்த எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தார்.
உடனடியாக அவரை அருகில் இருந்த தற்காலிக மருத்துவ மையத்திற்குக் கொண்டு சென்றனர். அவரது அடி வயிற்றில் குண்டுத் துகள்கள் பாய்ந்திருந்தன. நேற்று அவருக்கு பிரசவம் ஏற்பட்டது. பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்தத் தமிழ்த் தாய்.
பிறந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவமனை ஊழியர்கள், அக்குழந்தையின் இடது தொடையில், குண்டுத் துகள்கள் பாய்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். தாயிடம் முதல் பாலைக் கூட குடிக்காத நிலையில் அக்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடையில் பாய்ந்திருந்த துகள்கள் வெளியே எடுக்கப்பட்டன.
அதேபோல, கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் படுகாயமடைந்த 28 வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
படுகாயமடைந்த நிலையில் இருந்த அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது வயிற்றில் இருந்த கரு, இரு கால்களும் சுருங்கிப் போன நிலையில் பிணமாக எடுக்கப்பட்டது.
அடுத்த நாளே அந்தத் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நெட் இணையதளம் இந்த மனதை உறைய வைக்கும் செய்தியையும், படங்களையும் வெளியிட்டுள்ளது.
அதேபோல வியாழக்கிழமை ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் இறந்து பிறந்தன.
தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால், கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சுகாதாரமான, ஆரோக்கியமான உணவு அவர்களுக்குக் கிடைப்பதவில்லை. இதுவே இந்த அவலத்திற்குக் காரணம்.
கடந்த வாரம் வீசிய திடீர் புயல் மற்றும் கன மழை காரணமாகவும் கர்ப்பிணிப் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications