கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு- ரோஜாவுக்கு நோட்டீஸ்
சித்தூர்: ஆந்திர மாநிலம் சந்திரகிரி தொகுதியில், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியும், நடிகையுமான ரோஜாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஏப்ரல் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான தேர்தல் பிரசாரத்தில் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நடிகை ரோஜா சந்திரகிரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிராமம் கிராமமாக அவர் சென்று வீடு வீடாகப் போய் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10ம் தேதி ஹரிபுரம் என்ற கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை கொடுதது வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
இதையடுத்து இது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. சீர்வரிசை என்ற பெயரில் வாக்காளர்களுக்கு அவர் பணம், பொருட்களைக் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் புகார் கூறினர். இதையடுத்து திருப்பதி தாசில்தாரிடம் ரோஜா விளக்கம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications