இறங்கி வந்த அருண் ஜேட்லி-ராஜ்நாத்துடன் சந்திப்பு!
டெல்லி: பாஜகவில் மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லிக்கும் ராஜ்நாத் சிங்குக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
வட கிழக்கு மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராக மறைந்த பிரமோத் மகாஜனின் ஆதரவாளரான தொழிலதிபர் சுதான்சு மித்தலை நியமித்தார் கட்சியின் தலைவர் ராஜ்நாத். அவரை நீக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் ஜேட்லி. இதை ராஜ்நாத் ஏற்க மறுக்கவே, பாஜகவின் தேர்தல் ஆய்வு கூட்டங்கள், வேட்பாளர் இறுதி செய்யும் கூட்டங்களை புறக்கணித்து வந்தார் ஜேட்லி.
ஜேட்லிக்கு மூத்த தலைவர் அத்வானியின் ஆதரவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவும் உள்ளது. ஆனால், ராஜ்நாத் சிங்குக்கு சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோரின் ஆதரவு உள்ளது.
இந்த இரு தரப்பினரும் கட்சியில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என்ற போட்டியில் இறங்கினர். இதையடுத்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஆர்எஸ்எஸ் இறங்கியது.
இந் நிலையில் இன்று ராஜ்நாத் சி்ங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் ஜேட்லி. இதையடுத்து பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
பாஜகவுக்கு திரும்பும் உமா:
இதற்கிடையே கடந்த சில நாட்களாக அத்வானிக்கு ஆதரவாகப் பேசி வரும் உமா பாரதி இன்று மீண்டும் பாஜகவுக்குத் திரும்புவதாகத் தெரிவிதுள்ளார்.












Click it and Unblock the Notifications