பாலம்...தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்!
புதுக்கோட்டை: பாலம் கட்டாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ளது இசுகுப்பட்டி ஊராட்சியில் நாகரத்தினப்பள்ளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள வெள்ளாற்றில் மழை காலங்களில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதனால் ஆற்றை கடந்து செல்ல மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் இந்த வெள்ளாற்றில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம் கடுமையாக சேதமடைந்து நடக்கவே முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த பாலத்திற்கு பதில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று கடந்த 30 வருடங்களாக பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவி்ல்லை.
இதனால் இந்த பாலத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும் இல்லை என்றால் வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது என்று அந்த கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications