கருணாநிதியிடம் போனில் நலம் விசாரித்தார் பிரதீபா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வந்திருந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமியில், பயிற்சி முடித்த அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்தார் பிரதிபா. சனிக்கிழமை காலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காலை 10 மணியளவில் விமானப்படை விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
முன்னதாக தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்ட அவர் முதல்வரின் நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications