தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை 5 தொகுதிகளில் போட்டி
நாமக்கல்: லோக்சபாத தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.
இந்த அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
பின்னர் அமைப்பின் அமைப்பாளர் தனியரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், கொங்கு இளைஞர் பேரவை வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட விரும்பியது.
இதையொட்டி பேரவையின் சார்பில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்களை சந்தித்து நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருமாறு கேட்டோம்.
அவர்கள் நாமக்கல் தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறிவிட்டனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் உரிய தொகுதிகள் தருவதாக கூறினர்.
நமது பேரவை இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கரூர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளோம்.
அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மீண்டும் பிரதான கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தால், கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications