சிறுமிக்கு கடி-பெங்களூரில் 16 நாய்கள் அடித்து கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்ததை அடுத்து பொதுமக்கள் 16 நாய்களை அடித்து கொன்றனர்.
பெங்களூரில் உள்ள டிஜே ஹள்ளி திப்பு மொகல்லா பகுதியில் நிஷா என்ற சிறுமி நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று சிறுமியை கடித்து குதறியது.
இதில் அந்த சிறுமி பலத்த காயம் அடைந்தார். வலியில் அந்த சிறுமி அழுவதை பார்க்க பொறுக்கமாட்டாமல் அவளது உறவினர்கள் அவரை கடித்த நாயை தேடி கண்டுபிடித்து அடித்து கொன்றனர்.
அப்போது அவர்களது மனதில் கோபம் அடங்கவில்லை. அந்த வழியாக சென்ற அனைத்து நாய்களையும் அடித்து கொல்ல துவங்கினர். இதில் மொத்தம் 16 நாய்கள் அடித்து கொல்லப்பட்டன.
அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications